ரமலான் மாதத்தில் 666 முறை இக்லாஸ் சூராவை நிய்யத்துடன் ஓதுவதன் நன்மைகள் மற்றும் வழிமுறைகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- இக்லாஸ் சூராவை 666 முறை நிய்யத்துடன் ஓதுவது ரமலான் மாதத்தில் மிகப்பெரிய நன்மைகளை தரும்.
- இந்த சூரா ஓதுவதால் குடும்ப நிம்மதி, ஆரோக்கியம், பொருளாதார பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.
- நோன்பு மற்றும் தொழுகை இல்லாத பெண்களும் இந்த சூராவை ஓதலாம், இது தவறு அல்ல.
- நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இக்லாஸ் சூராவை காலை மற்றும் மாலை ஓதுமாறு அறிவித்தார்.
- ரமலான் முழுவதும் இந்த சூராவை தொடர்ந்து ஓதுவது அல்லாஹ்வின் நேசத்தையும் பலன்களையும் பெற உதவும்.
What the video covers
- வீடியோவில் இக்லாஸ் சூராவை 666 முறை நிய்யத்துடன் ஓதுவதன் பல நன்மைகள் விளக்கப்படுகின்றன.
- ரமலான் மாதம் குர்ஆனின் மாதமாகும் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் கூறுகிறது.
- சூரா ஓதுவதால் வருமானம், ஆரோக்கியம், குடும்ப நிம்மதி போன்ற பிரச்சனைகள் தீரும் என்று நம்பிக்கை தருகிறது.
- நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலை மற்றும் மாலை இக்லாஸ் சூராவை ஓதுமாறு அறிவித்ததை குறிப்பிடுகிறது.
- நோன்பு மற்றும் தொழுகை இல்லாத பெண்களும் இந்த சூராவை ஓதலாம் என்பதையும் விளக்குகிறது.
- சூரா ஓதுவதற்கான நிய்யத்தையும் முறைகளையும் விரிவாக கூறுகிறது.
- சூரா ஓதுவதன் மூலம் 200க்கும் மேற்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகிறது.
- வீடியோவில் ஆலிம்கள் கருத்துக்களையும் மேற்கோள்களையும் வழங்கி, சூரா ஓதுவதில் தவறு இல்லை என உறுதிப்படுத்துகிறது.
- ரமலான் முழுவதும் தினமும் சூராவை ஓதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
- சப்ஸ்கிரைப் செய்யவும், மெம்பர்ஷிப் மூலம் மேலும் பயனுள்ள அமல்களை அறியவும் அழைக்கிறது.
Full Transcript — Download SRT & Markdown
Speaker 1
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கண்ணியமிக்க சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Speaker 1
அல்ஹம்துலில்லாஹ்.
Speaker 1
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம்.
Speaker 1
இன்னைக்கு நான் ஒரு சூராவை பத்தி உங்களுக்கு சொல்லப்போறேன், ரொம்ப சந்தோஷப்பட போறீங்க, ஏன்னா எல்லாருக்கும் இந்த சூராவை தெரியும்.
Speaker 1
ஆனா இந்த சூராவை இப்படி ஓதணும்ங்கிறதுதான் உங்களுக்கு தெரியாம இருந்திருக்கும்.
Speaker 1
நான் எப்படி ஓதணும் அப்படின்னு சொல்லிட்டு நான் சொல்லப்போறேன், ரொம்ப ரொம்ப நிஜமாலுமே சந்தோஷப்படுவீங்க.
Speaker 1
ஏன்னா யாருக்காவது ஈஸியான ஒரு விஷயத்தை சொன்னா எப்படி தோணும்?
Speaker 1
நல்லவேளை நமக்கு தெரிஞ்சதா இருக்கு, ஈஸியா இருக்கு, இதை செஞ்சு பார்ப்போம், இதைக்கொண்டு நம்ம தேவை நிறைவேறினா நமக்கு என்னவா இருக்கும்?
Speaker 1
இந்த தடவை ரொம்ப பிரயோஜனமா இருக்கும்னு நம்ம நினைப்போம்ல, அப்படியான ஒரு அமல்.
Speaker 1
அதுவும் ரமலானுக்குமே ரொம்ப தொடர்புடைய அமல்.
Speaker 1
ஏன் ரமலானுக்கு தொடர்புடைய அமல்னு சொல்றேன்னா, ஒரே ஒரு சூராதான் நான் சொல்லப்போறேன்.
Speaker 1
ஆனா அந்த ஒரு சூரா அப்படிங்கிறது ஒரு குர்ஆனுக்கு சமம்னு சொல்லலாம்.
Speaker 1
ஒரு சூரா ஒரு குர்ஆனுக்கு சமம்னா, இந்த ரமலான் மாசம் எந்த எந்த சூராவை நம்ம ஓதணும்னு பார்த்தீங்கன்னா,
Speaker 1
முழு சூராக்களும், குர்ஆன்ல இருக்கக்கூடிய எல்லா சூராக்களும் ஓதணும்.
Speaker 1
முழு குர்ஆனுமே வந்து ரமலான்ல நமக்கு இறங்கிருக்குது அப்படிங்கறதுனால ரமலான்ல ஆரம்பிச்சு,
Speaker 1
ரமலான் வரையுமே வந்து நபி அவர்கள் வந்து என்ன பண்ணிருக்காங்க?
Speaker 1
குர்ஆனை வந்து கவர் பண்ணிருக்காங்கங்கறதுனால இந்த மாசமே ரமலான் மாதம் குர்ஆனின் மாதம்.
Speaker 1
குர்ஆனோடு தொடர்பு இருக்கணும்.
Speaker 1
வேதம் இறக்கப்பட்ட மாதம்னுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கு.
Speaker 1
அதனால குர்ஆன் ஓதிய நன்மையும் கிடைச்சு, குர்ஆன் ஓதிய பலனும் கிடைச்சு, அல்லாஹ்விடத்துல வந்து இந்த ரமலான் மாசத்துல உயர்ந்த நன்மை.
Speaker 1
நோன்பாளிக்கு எவ்வளவு நன்மை, எவ்வளவு கூலி இருக்குன்னு உங்களுக்கு தெரியும்.
Speaker 1
அல்லாஹ் வந்து என்ன பண்றான்? நரக நெருப்புல இருந்து முகத்தை தூரமாக்குறான் 70 வருஷம்னு.
Speaker 1
அதே மாதிரிதானே குர்ஆனை ஓதுறவங்களுக்கு அல்லாஹ் வந்து என்ன பண்ணுவான்? இன்னும் உயர்ந்த படித்தரங்களை சொர்க்கத்துல கொடுக்கிறேன்னு சொல்லிருக்கான்.
Speaker 1
அப்ப வந்து குர்ஆன் அப்படிங்கறதும் ஒரு பெரிய விஷயம்தான் அமல்கள்ல.
Speaker 1
எப்படி நோன்போ அதே மாதிரிதான்.
Speaker 1
அதனால நிறைய பேருக்கு ஓத தெரியாம இருக்கு.
Speaker 1
எனக்கு டைம் இல்லைங்கறாங்க.
Speaker 1
என்னால எல்லாம் ஒரு குர்ஆன் கூட ஓதி முடிக்க முடியல, நான் எங்க 10 குர்ஆன்லாம் ஓதுறதுன்னு நீங்க நினைக்கலாம்.
Speaker 1
நான் உங்களுக்கு சொல்றேன் இந்த சூராவை ஓதுங்க.
Speaker 1
200-க்கு அதிகமான குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்கும்.
Speaker 1
200-க்கும் அதிகமான.
Speaker 1
சுபஹானல்லாஹ்.
Speaker 1
அப்படியான சூரா என்னன்னு சொல்லிட்டு பார்க்கலாம்.
Speaker 1
அந்த சூராதான் வந்து பார்த்தீங்கன்னா, அல்லாஹ்வுடைய சிஃபத்தை சொல்லக்கூடிய குல்ஹுவல்லாஹு அகது அப்படின்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக்கூடிய இக்லாஸ் சூரா.
Speaker 1
இதை எப்படி ஓதணும்னு நான் சொல்றேன்.
Speaker 1
அதுக்கு முன்னாடி இதை ஓதினா என்ன நடக்கும்னு பார்த்தீங்கன்னா, உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு?
Speaker 1
எனக்கு காசுதான் பிரச்சனை, எனக்கு வறுமையா இருக்கு.
Speaker 1
வருமானம் வரமாட்டேங்குது.
Speaker 1
கடனுக்கு மேல கடனே.
Speaker 1
வீட்ல நிம்மதியே இல்லை அப்படின்னா,
Speaker 1
எல்லாத்துக்கும் இந்த ஒரு சூராவே போதுமானது.
Speaker 1
இல்லை எனக்கு வந்து பார்த்தீங்கன்னா ஆரோக்கியம் இல்லை.
Speaker 1
நான் வந்து நோயில இருக்கேன், என்னுடைய பெற்றோர்கள் நோயில இருக்காங்க.
Speaker 1
என்னுடைய குழந்தைகள் வந்து ஸ்பெஷல் சைல்டா இருக்காங்கன்னா,
Speaker 1
அதற்கும் இந்த சூராவே போதுமானது.
Speaker 1
அது இல்லாம உங்களுக்கு எந்த தேவையா இருந்தாலும் சரி, திருமணம் நடக்கணும்.
Speaker 1
குழந்தை வந்து அமையணும் எல்லாமே வந்து பார்த்தீங்கன்னா,
Speaker 1
இதுவே போதுமானது, இந்த ஒரு சூராவை நிய்யத் வைத்து ஓதிக்கொள்ளலாம்.
Speaker 1
எப்படி ஓதணும்னு பார்த்தீங்கன்னா 666 முறை.
Speaker 1
எத்தனை முறை?
Speaker 1
666 முறை அப்படின்னு நீங்க வந்து நிய்யத் வச்சுட்டு தினமும் கொஞ்சம் கொஞ்சமா ஓதி ஓதி எழுதி வச்சுக்கோங்க.
Speaker 1
இந்த ரமலான் மாசத்துல.
Speaker 1
இன்னைக்கு ஆரம்பிங்க, ஆரம்பிச்சு ஒளு இல்லாட்டினாலும் நம்ம ஓதிக்கலாம்.
Speaker 1
சிலர் வந்து சொல்றாங்க, நம்ம வந்து குர்ஆன் சூராங்கறதுனால நம்ம வந்து ஒளு செஞ்சுட்டுதான் ஓதணும்னு.
Speaker 1
ஆனா நீங்க வந்து மனப்பாடமா இருக்கிற சூராக்களை நீங்க ஓதிக்கொள்ள முடியும்.
Speaker 1
ஒன்னும் தவறு கிடையாது.
Speaker 1
இன்னும் வந்து பார்த்தீங்கன்னா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலை மாலை இதை ஓதி வாங்கன்னே சொல்லிருக்காங்க.
Speaker 1
அப்ப காலை மாலை இதை ஓதி வாங்கன்னு நபி அவர்கள் சொல்லும்போதே மாதவிடாய் பெண்களும் என்ன பண்ணலாம்?
Speaker 1
இதை ஓதிக்கொள்ள முடியும்.
Speaker 1
அதாவது வந்து சிலதெல்லாம் வந்து ரெகுலராவே செய்யக்கூடிய துஆக்கள், திக்ருகள், சூராக்கள்ங்கும்போது,
Speaker 1
நம்ம அதை என்ன பண்ணலாம்? பீரியட் சமயத்துல கூட செய்து கொள்ள முடியும்.
Speaker 1
இதனால வந்து ஒரு தவறும் இருக்காது.
Speaker 1
இதை வந்து பல ஆலிம்கள் கருத்து சொல்றாங்க.
Speaker 1
ஒரு சில ஆலிம்கள் என்ன சொல்றாங்கன்னா, இல்லை குர்ஆன் வசனங்களை வந்து,
Speaker 1
நம்ம வந்து தொழுகை இல்லாதப்ப ஓதக்கூடாதுன்னு சொல்றாங்க.
Speaker 1
ஆனா வந்து ஒரு சில ஆலிம்கள் வந்து குர்ஆன் வசனங்களை வந்து ஓதலாம் அப்படிங்கறதுக்கான ப்ரூஃபை காட்டுறாங்க.
Speaker 1
நபி அவர்கள் வந்து ஓதும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்கத்தால அவங்களுடைய மனைவியர்கள் வந்து உட்கார்ந்திருந்திருக்காங்க.
Speaker 1
குர்ஆன் ஓதும்போது.
Speaker 1
பத்தாவதுக்கு வந்து சாஞ்சிட்டு ஓதிருக்காங்க.
Speaker 1
அவங்க மேல சாஞ்சிட்டு ஓதிருக்காங்க.
Speaker 1
அதுக்கப்புறம் அவங்க வந்து பார்த்தீங்கன்னா வந்து அஜ் உம்ரா செய்யும்போது வந்து தொழுகை இல்லாத நிலைமையில இருந்திருக்காங்க.
Speaker 1
இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வந்து பார்த்தீங்கன்னா இருக்குது.
Speaker 1
இன்னும் வந்து எந்த ஒரு அறிவிப்பிலயும் நேரடியாக தொழுகை இல்லாதப்ப பெண்கள் இதை ஓதாதீங்கன்னு சொல்லல.
Speaker 1
தொழுகை இல்லாத பெண்கள் நோன்பு வைக்க தேவையில்லை, தொழுகை இல்லாத பெண்கள் ஐந்து நேரம் தொழுகை தேவையில்லைங்கறது மட்டும்தான் வந்திருக்கு நமக்கு.
Speaker 1
தொழுகையும் நோன்பும் மட்டும்தான் தொழுகை இல்லாதவங்க நம்ம செய்ய முடியாதே தவிர, மத்தபடி வந்து பார்த்தீங்கன்னா,
Speaker 1
எந்த இடத்திலயுமே வந்து நீங்க வந்து குர்ஆனை ஓத வேண்டாம்ங்கறதையோ, இந்த சூராக்களை ஓதுறதை பத்தி எல்லாம் வரவே இல்லை.
Speaker 1
வழமையா ஓதுவதை எப்போதும் ஓதிக்கொள்ளக்கூடியதாகத்தான் இதெல்லாம் இருக்கு.
Speaker 1
அதனால இந்த சூராவை நீங்க 666 முறை நிய்யத் வைத்து நீங்க வந்து ஓதிக்கொள்ளுங்க.
Speaker 1
அப்படி இந்த ரமலானுக்குள்ள இதை ஓதி முடிச்சிட்டீங்கன்னா, டெய்லி இவ்வளவு ஓதணும்னுலாம் கிடையாது.
Speaker 1
ஒரு மாசத்துக்குள்ள.
Speaker 1
ரமலானுடைய அதாவது நமக்கு வந்து ரமலான் முடியற வரையும் இப்ப என்ன பண்ணுங்க நிய்யத் வச்சுட்டு,
Speaker 1
அந்த ரமலான் முடியறதுக்குள்ள நான் முடிச்சறேன்னு சொல்லிட்டு நீங்க ஓதுங்க.
Speaker 1
ஒரு நாளைக்கு கம்மியா ஓதலாம், ஒரு நாளைக்கு எக்ஸ்ட்ரா ஓதலாம்.
Speaker 1
ஒரு நாளைக்கு பகல்ல ஓதலாம், ஒரு நாளைக்கு இரவுல ஓதலாம், நீங்க பொறுமையா குல்ஹுவல்லாஹு அகது சூராவை,
Speaker 1
எந்த நிய்யத்துக்காக வச்சிருக்கீங்களோ, அந்த நிய்யத்தெல்லாம் கபுல் ஆகுறதுக்காக ஓதுங்க.
Speaker 1
ரொம்ப முக்கியமா இது ரமலானுடைய மாசமா இருக்கறதுனால,
Speaker 1
எல்லா துஆக்களும் எனக்கு கபுல் ஆகணும்னு சொல்லிட்டோ, இல்ல வந்து ஒரு முக்கியமான ஒரு மூணு நாலு துஆவை நிய்யத் வச்சு நீங்க ஆரம்பிச்சிரணும்.
Speaker 1
உங்களுக்கு எல்லாருக்குமே நிறைய பிரச்சனை இருந்தாலும்,
Speaker 1
ஒரு மூணு நாலு விஷயம் இருக்கும்ல.
Speaker 1
நல்ல கடனெல்லாம் அடைஞ்சு வசதி வந்துரணும் எங்களுக்கு.
Speaker 1
அதே மாதிரி குடும்பத்துல நிம்மதி ஒத்திமை இருக்கணும்.
Speaker 1
நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைச்சிரும்னு சொல்லிட்டு எது பெரிய விஷயமா இருக்கோ, அந்த பெரிய விஷயத்தை ஒரு மூணு விஷயத்தை நிய்யத் வச்சுக்கோங்க.
Speaker 1
அந்த மூணு விஷயத்தை நிய்யத் வச்சுட்டு என்ன பண்ணுங்க?
Speaker 1
இதை ஓதி பாருங்க, இதை ஓத ஓத உங்களுக்கு குர்ஆன் ஓதிய நன்மையும் கிடைச்சிரும்.
Speaker 1
அதோட சேர்ந்து வந்து பார்த்தீங்கன்னா,
Speaker 1
ரமலான் மாசத்துல வந்து இந்த சூராவை அதிகமா ஓதுனதுனால அல்லாஹ்வுடைய நேசமும் கிடைச்சிரும்.
Speaker 1
உங்க தேவையும் நிறைவேறும்.
Speaker 1
இதுல வந்து நிறைய வந்து பிரயோஜனங்கள் உங்களுக்கு இருக்கும்.
Speaker 1
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
Speaker 1
நம்ம இந்த மாதிரி பயன் தரக்கூடிய அமல்களைதான் போட்டுட்டு இருக்கோம்.
Speaker 1
மெம்பர்ஷிப்ல ஜாயின் பண்ணிக்கோங்க.
Topics:ரமலான்இக்லாஸ் சூராகுர்ஆன் ஓதல்நிய்யத்நன்மைகள்துஆநோன்புதொழுகைஅல்லாஹ்முஹம்மது











