இந்த நாள்ல மகரிபுடைய தொழுகைக்கு பிறகு அதிக பலன் கொண்ட மிக சக்தி வாய்ந்த திக்ருகளை நம்ம ஓதுறதும் இன்னும் அல்லாஹ்விடத்தில துஆக்களை கேட்கிறதுமா நம்ம இருந்தோம் அப்படின்னா ஏராளமான நன்மையும் கிடைக்கும் நம்மளோட துஆவுக்கு பதிலும் கிடைக்கும்.
இன்ஷா அல்லாஹ் இந்த திக்கரை நம்ம ஓதுனோம் அப்படின்னா அல்லாஹ்வினுடைய ஆறுதல் உடனடியாக வந்தடையும் அல்லாஹ்வினுடைய உதவி அடுத்த நொடி வரும் ஏன்னா இது ஒவ்வொரு மாமீன்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு திக்கர்.
இது நம்ம எல்லோருக்கும்மே தெரியும் நம்ம எல்லோருமே ஓதி பலன் அடைஞ்சிருப்போம் நிறைய பலன்களை கொடுக்கக்கூடியது ஆறுதல் கொடுக்கக்கூடிய வார்த்தை இது இதை ஓதினா அடுத்த நொடி கஷ்டம் நீங்கும் ஆனா ஓதும்போது நம்பிக்கையோடு ஓதணும் எனவே இந்த திக்கரையும் நம்ம ஓதிக்கலாம்.
அடியார்களில் நின்றும் என்னுடைய ரப்பே எனக்கு போதுமானவன் இந்த வார்த்தை மனிதர்களுடைய தேவைகள் எல்லாம் எனக்கு எதுவும் இல்லை எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்னு சொல்லக்கூடிய வார்த்தையாக இருக்கு.
படைப்பினங்களில் நின்றும் என்னை படைத்தவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் எப்படிப்பட்ட ஒரு வார்த்தை பாருங்க அப்போ எந்த படைப்புக்கள்ட்டயுமே நம்மளோட தேவை அல்லாஹ் வச்சிருக்க மாட்டான் நேரடியா அல்லாஹ்வே உதவி செய்வான்.
யார்கிட்டயும் நீங்க போய் எதற்காகவும் நிக்க வேண்டாம் பணத்துக்காகவா இருக்கலாம் வேற எந்த விஷயத்துக்காகவாவும் இருக்கலாம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லாஹ்வே பார்த்துக்கொள்வான்.
வசதி பெற்றவர்களில் நின்றும் மற்றவர்களுக்கு உணவளிப்பவர்களில் நின்றும் எனக்கு ரிஸ்க் அளிக்கக்கூடியவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் இதை நம்ம சொல்றதுனால நமக்கு செல்வம் சார்ந்த பிரச்சனைகளை அல்லாஹ் தாலா பொறுப்பேற்று அதுல ஆறுதலும் நமக்கு சொல்வான்.
இந்த திக்கரை நம்ம சொல்வதின் காரணமாக அல்லாஹுத்தஆலா நம்மளோட எல்லா விஷயங்களையும் பொறுப்பேற்று சரியான முறையில கையாளுவான் அப்ப நமக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது.
என் மீது பொறாமை கொண்டவர்களுக்கு எதிராக என்னை பாதுகாப்பவனே எனக்கு போதுமானவன் அப்போ எதிரிகளுடைய பிரச்சனை தீங்கு செய்பவர்களுடைய பிரச்சனை எல்லாம் நமக்கு இருக்காது.
என்னுடைய நரக விவகாரங்களில் சிறப்பாக எனக்கு துணை புரிபவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் அப்போ நரகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு தீங்குகளும் நமக்கு கிட்டத்தில கூட வராது அல்லாஹுத்தஆலா பாதுகாப்பான்.
எல்லா பொருட்களின் ஆட்சியும் அவனிடமே இருக்கிறது அவனே பாதுகாக்கிறான் அவனிடமிருந்து யாராலும் பாதுகாக்க முடியாது அவனைத் தவிர வேறு யாரும் இல்லை அவனே மகத்தான அர்ஷுடைய ரப்பாக இருக்கின்றான் சுபஹானல்லாஹ் எப்படிப்பட்ட ஒரு துஆ பாருங்க.
அதுவும் இம்மை மறுமை ரெண்ட பத்தியுமே கேட்கக்கூடிய ஒரு அழகான ஒரு ஆறுதல் கொடுக்கக்கூடிய ஒரு துஆவாக இருக்கு எனவே இன்றைய தினம் இந்த 12யுமே சேர்த்து ஒரு தடவை ஓதுங்க அல்லது ஓதுறதை காதுல போட்டாவது கேளுங்க இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹுத்தஆலா நம் அனைவருடைய அனைத்து தேவைகளையுமே இந்த மகத்தான ரமலான் மாதத்தின் பரக்கத் கொண்டு இந்த வியாழக்கிழமையின் பரக்கத் கொண்டு கபூலாக்கி தருவானாக ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
மேலும் இதுபோல சிறந்த வஜீபாக்கள் உள்ளடங்கிய இன்னும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் தான் அனைத்து தேவைகளுக்கும் அற்புதம் வஜீபாக்கள் நீங்க தேடக்கூடிய ஒவ்வொரு தேடல்களுக்கும் இதுல தீர்வு உண்டு இதுல நிறைய வஜீபாக்கள் இருக்கு எனவே இன்ஷா அல்லாஹ் இந்த கிதாப் வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.