இந்த திக்ரு நம்மல பலருக்கும் தெரியாது ஆனால் ரசூலுல்லாஹ் பத்ருடைய நாள்ல சூரியன் உதயமான உடனேயே இரண்டு கைகளையும் வானத்தின் பக்கம் ஏந்தி இந்த திக்ரை தான் அவங்க ஓதி இருக்காங்க.
அதாவது என்ன துஆவை அல்லாஹ்விடத்தில கேட்டாங்களோ அந்த துஆவை நான் தர்றேன் அப்படின்னு அதைவிட சிறந்ததா நான் தருவேன் அப்படின்னு அல்லாஹ் ஒரு வகியை அனுப்பி இருக்கான் அந்த அளவு இது ஒரு சிறந்த திக்ரா இருக்கு.
ஏன்னா ஒரு ஹாஜத்தை மனசுல நிய்யத் வச்சுக்கிட்டு ரப்பு கிட்ட எந்த வார்த்தையை கொண்டு கேட்டா நம்ம ரப்பு உதவி செய்வான் அப்படின்னு யோசிச்சு இந்த திக்ரை நான் ஓதி கேட்டு இருக்கேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போர் நாளில் எதிரிகளான இணை வைப்பாளர்கள் எண்ணிக்கை ஆயிரம் பேராக இருப்பதையும் முஸ்லிம்களான தம் தோழர்கள் முன்னூற்று பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள்.
இதனுடைய பொருள் என்ன அப்படின்னா இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக என்று தம் கரங்களை நீட்டி கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
நீங்கள் உங்கள் ரட்சகனிடம் உங்களை ரட்சிக்க தேடிய போது அணி அணியாக உங்களோடு இணைந்து அடுத்தடுத்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
இன்றைய தினம் இந்த பதிவை கேட்ட உடனேயே இந்த தினத்தை நீங்க அடைந்து கொண்டாலே இந்த வார்த்தையை சொல்லி அல்லாஹ்விடத்தில நீங்க கையேந்தி உங்களுடைய தேவைகளை குறித்து கேளுங்க.