முருகனே உங்களை தேடிவரும் சூட்ஷமம் | Jeevitha Sureshkuma… — Transcript

செவ்வாய் தோஷம் மற்றும் முருகன் வழிபாடு பற்றிய விரிவான விளக்கம் மற்றும் பரிகார முறைகள்.

Key Takeaways

  • செவ்வாய் தோஷம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கும், அதற்கான பரிகாரம் அவசியம்.
  • முருகர் வழிபாடு செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
  • கர்மா இறக்கி வைக்க பிராயச்சித்தம் செய்த பிறகு பரிகாரம் செய்ய வேண்டும்.
  • காலபைரவர் வழிபாடு மற்றும் விளக்கு ஏற்றுதல் பரிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • வீட்டிலேயே நம்பிக்கையுடன் முருகர் வழிபாடு செய்யலாம்.

Summary

  • செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் முருகர் வழிபாடு செய்வது முக்கியம்.
  • முருகரை சிகப்பு மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும், மனதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய் இருக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்.
  • செவ்வாய் தோஷம் வாழ்க்கை, வீட்டுவசதி மற்றும் மனநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்யும் முன் கர்மாவை இறக்கி வைக்க பிராயச்சித்தம் அவசியம்.
  • காலபைரவர் வழிபாடு மற்றும் அஷ்டமி, அமாவாசை போன்ற நாட்களில் விளக்கு ஏற்றுதல் பரிகாரத்தில் முக்கியம்.
  • செவ்வாய் தோஷம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், நிதானம் மற்றும் உடல் பிரச்சனைகள் பற்றி விளக்கம்.
  • முருகர் வழிபாட்டின் போது கந்தசஷ்டி கவசம் மற்றும் மந்திரங்களை கேட்க பரிந்துரை.
  • வீட்டிலேயே முருகர் புகைப்படத்துடன் வழிபாடு செய்வது சாத்தியமாகும்.
  • செவ்வாய் தோஷம் மற்றும் அதற்கான பரிகார முறைகள் குறித்து தெளிவான அறிவுரை.

Full Transcript — Download SRT & Markdown

00:14
Speaker A
இப்போ, அது எப்படி வழிபடலாம்னா, இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க, தங்கிடுங்க, புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
00:26
Speaker A
முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
00:30
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ, இல்ல செகப்பு அரளியோ,
00:35
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா, அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
00:40
Speaker A
இப்ப எட்டில செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
00:46
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
00:51
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும், அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
01:41
Speaker B
வணக்கம் மேம்.
01:42
Speaker A
வணக்கம்.
01:43
Speaker B
எல்லா முருகன் கோயிலிலும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க, அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாரனாலயும் முருகனை பார்க்கவே முடியல, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டன் வந்துறாங்க.
01:56
Speaker B
ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க?
01:57
Speaker A
ஏன்னா செவ்வாய் காரகன், அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது, அதனாலதான் வந்து வியாழன்.
02:02
Speaker A
அதனாலதான் இந்த ரெண்டு நாள்.
02:03
Speaker A
இப்போ, அது எப்படி வழிபடலாம்னா, இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க, தங்கிடுங்க, புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
02:11
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி, அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.
02:15
Speaker A
அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம், இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.
02:27
Speaker A
இந்த இதுதான் அந்த காம்பினேஷன், செவ்வாய், புதன், வியாழன், இந்த மூணும்.
02:32
Speaker A
இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க, இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணனாலும் சிறப்போ சிறப்பு.
02:38
Speaker A
ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.
02:42
Speaker A
இந்த பச்சையையும் குறிக்கும்.
02:44
Speaker A
மயிலையும் குறிக்கும்.
02:46
Speaker A
சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ் புதன் அப்படிங்கறது.
02:50
Speaker A
முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.
02:54
Speaker A
அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.
03:01
Speaker A
இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கறது இல்லை.
03:04
Speaker A
முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்.
03:07
Speaker A
ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா, அந்த கிழமைகள்ல அவங்களுடைய எனர்ஜி வந்து நம்மளுடைய எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கறப்ப உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை.
03:24
Speaker A
நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.
03:28
Speaker A
உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை.
03:30
Speaker B
இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க, நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் நல்லா கோயில்ல எல்லாம் போய் தங்க முடியாது.
03:35
Speaker B
நான் வந்து வீட்டிலேயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?
03:40
Speaker A
தாராளமா, அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
03:43
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ, இல்ல செகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்போ முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.
03:49
Speaker A
வேல்மாறல் கேட்கிறதோ, கந்தசஷ்டி கவசம் கேட்கிறதோ,
03:52
Speaker A
இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே அந்த அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.
03:59
Speaker A
முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.
04:02
Speaker A
நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்ல.
04:05
Speaker A
நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.
04:07
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா, அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
04:12
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க, சிகப்பு கலருக்கு சொந்தக்காரர், ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.
04:26
Speaker B
சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.
04:32
Speaker B
சில பேர் ஜாதகக்காரர்கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசா, புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள், சில விஷயங்கள் சொல்லுவாங்க.
04:42
Speaker B
அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.
04:45
Speaker B
சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.
04:47
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கறதுதான் அதனுடைய கணக்கு.
04:53
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
05:00
Speaker A
இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.
05:04
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் உட்கார்ந்துருச்சு, நாலுல செவ்வாய் உட்கார்ந்துருச்சுன்னா இதெல்லாமே செவ்வாய் தோஷம்.
05:08
Speaker A
நாலுல செவ்வாய் உட்கார்ந்துருச்சுன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம்.
05:10
Speaker A
எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம்.
05:12
Speaker A
சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும்தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா உங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ ஏதோ ஒரு இஸ்யூ.
05:18
Speaker A
ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள், அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வர்றது அந்த மாதிரி வந்து இருக்கும்.
05:24
Speaker A
அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.
05:29
Speaker A
சொந்த வீடு அமையாது.
05:30
Speaker A
அவங்களுக்குதான் இந்த வீடு பிரச்சனை வருது.
05:32
Speaker A
லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க, நல்லா இருக்கும், எங்கேயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.
05:38
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
05:45
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.
05:49
Speaker A
ஏன்னா நிதானம் இருக்காது.
05:52
Speaker A
ஆக்ரோஷமா இருக்கிறது அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.
05:57
Speaker A
அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லிதான் ஆகணும்.
06:01
Speaker A
கண்டிப்பா.
06:02
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்குங்கறது சொல்றதுதான் அது.
06:08
Speaker A
அதை சரி பண்ணிக்கணும்.
06:09
Speaker A
இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா என் அப்பாவை நான் பார்க்கணும்.
06:12
Speaker A
அப்படி அவங்க யோசிக்கணும்.
06:13
Speaker A
என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது?
06:14
Speaker A
ஹெல்த் பார்க்கிறது, அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.
06:18
Speaker A
அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.
06:22
Speaker A
இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது, ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு, இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா அப்போ அது வீக் ஆயிட்டே போகுதுன்னா,
06:30
Speaker A
கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.
06:33
Speaker A
ஹெல்த் வைஸ் பண்ணாது, டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.
06:37
Speaker A
ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.
06:39
Speaker A
இல்லை இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது செவ்வாய்.
06:43
Speaker A
வாழ்க்கையில.
06:44
Speaker A
ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்.
06:46
Speaker A
செவ்வாய்க்கு.
06:47
Speaker A
ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம் புத்தி உடையது.
06:50
Speaker A
கேதுதான் நிதானத்தை கொடுக்கும்.
06:52
Speaker A
அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.
06:56
Speaker A
அதுல நம்மளுக்கு ஒரு அப்செட்டை கொடுக்கும்.
06:58
Speaker A
கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே நான்தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.
07:05
Speaker A
இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.
07:07
Speaker A
சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.
07:09
Speaker A
சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.
07:11
Speaker A
சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா காலபைரவரை வழிபாடு பண்ணனும்.
07:14
Speaker A
அஷ்டமி, அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.
07:20
Speaker A
விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.
07:23
Speaker A
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.
07:26
Speaker A
பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க அதாவது அஷ்டதிக்கு பாலகர்கள் கூட சொல்லுவாங்க.
07:31
Speaker A
அஷ்டதிக்கு பாலகர்களை தொட்டெல்லாம் வழிபாடு பண்ணக்கூடாது.
07:34
Speaker A
அஷ்டதிக்கு பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.
07:38
Speaker A
உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.
07:40
Speaker A
அது அஷ்டதிக்கு பாலகர்கள்தான் பார்த்துட்டே இருப்பாங்க.
07:42
Speaker A
எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.
07:46
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்.
07:49
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா அவருக்கு கீழ ஆறு சிவன் இருக்கும்.
07:55
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவர் கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.
07:58
Speaker A
அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.
08:02
Speaker A
ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.
08:06
Speaker A
இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கறதுதான் அது.
08:10
Speaker A
அதுதான் அந்த செவ்வாய் காரகன்.
08:11
Speaker A
இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
08:14
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும், அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
08:20
Speaker A
இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.
08:23
Speaker A
பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.
08:25
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.
08:28
Speaker B
பிராயச்சித்தம் பண்ணிட்டுதான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.
08:32
Speaker B
இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வர்றது வந்துட்டு பெண்களைதான் அதிகமா சொல்லுவாங்க.
08:44
Speaker B
இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு, இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம்.
08:50
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிடும்.
08:56
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீட்ல நல்லா இருக்காது.
09:01
Speaker B
வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்துல இருக்கிற கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.
09:05
Speaker B
அது உண்மைதானா மேம்?
09:06
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.
09:09
Speaker A
பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.
09:11
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும்.
09:13
Speaker A
அவங்களுக்கு.
09:14
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.
09:18
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள்தான்.
09:20
Speaker A
ஆனா அவங்களால குடும்பம் கொலையப் போகுது, சீர்கெடப் போகுது அந்த மாதிரி எல்லாம் கிடையாது.
09:25
Speaker A
அந்த மாதிரி எல்லாம் இஸ்யூஸ் ஆகாது.
09:26
Speaker A
ஏன்னா அவங்க எல்லாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க அந்த செவ்வாய்.
09:31
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.
09:33
Speaker A
அவங்களால அது நடக்கல.
09:35
Speaker A
இது வந்து அவங்களுடைய கர்மா.
09:37
Speaker A
அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப இங்க இது கிளியர் ஆயிடும்.
09:43
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.
09:46
Speaker A
செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.
09:52
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.
09:56
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சிரும்.
09:59
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.
10:00
Speaker A
அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.
10:04
Speaker A
குருவை குருமார்களை மதிக்கிறது.
10:05
Speaker A
ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்,
10:10
Speaker A
செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
10:12
Speaker A
அப்போ அங்க குரு இருக்கிறப்போ செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.
10:14
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க, விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.
10:19
Speaker A
அதுவும் பார்த்தீங்கன்னா அதுவும் ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன்தான் அது.
10:22
Speaker A
அப்படி இருக்கிறப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.
10:26
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.
10:28
Speaker A
குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது, செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.
10:34
Speaker A
குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங்.
10:39
Speaker A
அப்ப எதுவும் நடக்காது.
10:40
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன, அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும், பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும் செவ்வாய் தோஷம் இருக்கிறவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம்.
10:48
Speaker B
அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
10:50
Speaker B
தொடர்ந்து பேசுவோம்.
10:51
Speaker B
நன்றி.
Topics:செவ்வாய் தோஷம்முருகர் வழிபாடுபரிகாரம்கர்மாகாலபைரவர்அஷ்டமிஅமாவாசைகந்தசஷ்டி கவசம்மந்திரம்தமிழ் ஆன்மீகம்

Frequently Asked Questions

முருகனை எந்த மலர்களால் வழிபட வேண்டும்?

முருகனை சிகப்பு மலர்களால் வழிபட வேண்டும். வீட்டில் ரோஜா அல்லது செகப்பு அரளி மலர்களைப் பயன்படுத்தலாம்.

முருகனை வழிபட உகந்த நாட்கள் எவை, ஏன்?

செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் முருகனை வழிபட உகந்தவை. செவ்வாய் முருகனின் காரகன், வியாழன் குருவாக பார்க்கப்படுவதால், புதன் புத்தி மற்றும் சித்தர்களைக் குறிப்பதால் இந்த நாட்கள் சிறப்பு.

கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் முருகனை எப்படி வழிபடலாம்?

கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகனை வழிபடலாம். செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களில் வீட்டிலிருந்தே வழிபாடு செய்யலாம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →