இந்த 10 நாள்ல செய்யக்கூடிய மிக முக்கியமான அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம் அதுல வரக்கூடிய 10 நாளும் நம்ம எல்லோருமே அவசியம் ஓதிக்கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ஒரு சூராவை தான் நம்ம பார்க்க போறோம்.
இந்த சூராவை பொறுத்தவரைக்கும் லைலத்துல் கத்ருடைய இரவுல ஓதுறதுக்கு மிக பொருத்தமான ஒரு சூரா அதுமட்டுமல்ல உங்களுடைய ஆசைகள், விருப்பங்கள், தேவைகளை நீங்க நிய்யத் வச்சுக்கிட்டு இந்த இறுதி 10 நாள்ல தினமும் நீங்க தவறாம இரவு தூங்குறதுக்கு முன்னாடி ஏழு தடவை ஓதிட்டு உங்களோட ஹாஜத்தை அல்லாஹ்விடத்தில கேட்டுட்டு வந்தீங்க அப்படின்னா இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் முடியறதுக்கு முன்னாடி அல்லாஹ் உங்களுக்கு அந்த விருப்பத்தை நசீபாக்கி தந்துருவான்.
ஏன்னா இந்த சூராவுக்கு ஏராளமான சிறப்பு இருக்கு இதை ரமலான் அல்லாத மாதங்கள்ல ஓதுனாலே இரவுல தூங்குறதுக்கு முன்னாடி ஏழு தடவை ஓதுனாலே நம்மளுடைய நாட்டை அல்லாஹ் நிறைவேற்றி தருவான்.
அதுல கூட நிறைய சகோதரிகள் இதை ஓதி எங்களுக்கு பலன் கிடைச்சுச்சு ஓதிய அடுத்த நாள் காலையிலேயே எங்களுக்கு பலன் கிடைத்தது பணம் எங்களுக்கு கிடைத்தது தேவையான விஷயங்கள் நடந்தது அப்படின்னு சொல்லி சொல்லி இருந்தாங்க.
இந்த சூராவை இந்த லைலத்துல் கத்ருடைய இரவுகள்ல யார் ஏழு தடவை ஓதுறாங்களோ அவங்களுக்கு வருடம் முழுவதும் பிரச்சனைகள் தடுக்கப்படுமாம் வானவர்கள் மூலமாக நமக்கு வரக்கூடிய சோதனைகள் தடுக்கப்படுது.